ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள்.
ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள். #துருக்கியர்கள் அதாவது #உதுமானியப் பேரரசுகளின் சமயத்தில் ரமலானை வரவேற்கவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் சில அனுஷ்டிப்புகளை அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில் 1) #நகாரா அடித்தல் : - ரமலான் நோன்பிருக்கவிருக்கும் நபர்களை அதிகாலை 3 மணியளவில் எழுப்பி விடுவதற்கு நன்கு ராஜ உடை தரித்த ஒருவரை நியமித்து மக்களை உரிய நேரத்தில் விழிப்படைச் செய்ய கொட்டுப்பறை அடிப்பார்கள். அவ்வாறு அடிக்கும் போது இஸ்லாமிய ஒழுக்கங்களை கற்பிக்கும் விதமான பாடல்களையும் அவர்கள் பாடிக்கொண்டு வருவார்கள் (இந்தியா உட்பட அனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்த நகாரா அடிக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. உதுமானிய பேரரசின் தாக்கம் என்பதாக இதனை அறியலாம். தமிழகத்தில் நோன்பு திறப்பதற்கும் நகாரா அடிப்பார்கள்.) 2) #பிள்ளை நோன்பு : - குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களை நோன்பு வைக்க ஆர்வமூட்டுவதற்காக பசி பொறுக்காத பிள்ளைகளை ரகசியமாக அழைத்து நண்பகல் நேரத்திலேயே உணவை கொடுத்து உண்ணச்செய்துவிட்டு, என் குழந்தை நோன்பு பிடித்தது என்பார்களாம். ரகசியமாக தனக்கு தரப்பட்ட உணவை உண்ணாமல் முழு ஈமானுடன் நோன்பு வைத்த பிள